link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, November 18, 2010

கிடைக்குமா வாழ்வில் ஓர் வரமாக..


கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள்
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்

தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால்
காலம் முழுவதும்
கல்லறை வரையிலும்

கண்மூடி காத்திருக்கின்றேன்

காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவன் நீ
இருப்பினும் கல்லறை வரை
காத்திருப்பு தேவையா?

உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது நான் வரையும்
இந்த கவிதை தான்

உன் குரல் கேட்க
இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது.
இசை பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா?

என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள்
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில்
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
சொல்லி அழுவதற்கு
ஏற்கும் மனம் வேண்டும்
கிடைக்குமா வாழ்வில்
ஓர் வரமாக....!

Wednesday, November 10, 2010

என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே


என்னடி பெண்ணே
எது உந்தன் காதல் அகராதி
விளங்காது விழி பிசுங்கி நிற்கும்
விடலை ஆண்யாதியில் நானும் ஒருவன்...

கழிவு என்று தூக்கிப்போட்ட
காகிதத்தை கூட சேகரித்தாய் பொக்கிஷம் என்று
காதல் ஜனனித்த முதல் மதங்களில் .....இன்று
கழிவு நீ என்று என்னையே தூக்கிப்போட்டாயே!!!
என்னடி நியாயம் இது ? !!
எங்கு நான் போய் சொல்ல ?

காதல் கண்களில் ஜனனிகிறது,
கண்ணீரால் அவ்வலியை இறக்கி வைக்க முயன்றாலும் ,
இதயத்தை குடைகிறது.....
இனிமையை கலைக்கிறது...

இக்கரை இருந்தவரை என்னிடம்
சக்கரை போல் இனிய காதல் கதை சொன்னவள்
அக்கரை சென்றதும் அடியேனை மறந்தாளே
எக்கரை போய் இதை நான் சொல்ல

கவிஞன்கள் பல முன்மொழிந்தனர் _தம்
கவிக்கு முகவரி தந்தது கன்னி என்று _இன்று
இக்கவியில் நான் முன்மொழிகிறேன்
என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே...
என் காதல் தேவதையே....