link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Saturday, May 28, 2011

என் அம்மாவுக்கு ..............

ஏழையாய் பிறந்தாலும் ......
என்னை மேதையாய் வளர்த்தாய் .........

பேதை பருவம் எல்லாம் ..........
பாதை காட்டி .........

அ சொல்லி அன்பையும் .............
தந்து .........

மழை வெயில் உன் முந்தானை ........
குடை தந்து ........

ஆசை முத்தம் தந்து ........
பாசையும் சொல்லி தந்து ...........

என்னை பாங்காய் வளர்த்த ......
உன்னை தாங்குவேன் ........

இம்மண்ணை தொடும் நாள் வரையில் .........
என் கண்ணீரை எல்லாம் ....
உங்கள் முன் புன்னகையாக .....

புத்தம் புது கவிதைகளாக ......
புன்னகைக்கிறேன் ........

முகம் அறியா எத்தனையோ .....
முகவரிகள் .......

என் பக்கங்களை முத்தம் ........
இடுகின்றன !!!!!

என் எழுத்துக்கும் ......
ஒரு முகவரி தந்த .........

இந்த எழுத்து தளத்தின் வழியாக ......
வாசம் வீசுகிறேன் ......
உந்தன் பாசத்தையும் ........
உந்தன் நேசத்தையும் ........
சொல்லமுடியாத வார்த்தைகள் ........
ஆனாலும் உந்தன் பாசத்தால் .....
மலர்ந்த நான் வாசம் வீசுகிறேன் ........

இந்த தலத்தில் என்றும் உன் பாசத்துடன் ,,,,,,,,,
பாலகனாக உன் நேசம் நாடியே !!!!!