link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Saturday, July 31, 2010

உன் நினைவுகள் சாகக்கூடாது





மரணத்தை தேடிச்சென்ற
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல......
உன் நினைவுகள் சாகக்கூடாது

Thursday, July 29, 2010

யாரையும் கஷ்டப்படுத்தாமல் தூங்குகின்றேன்

உன் அருகில் இருக்கும் போது
என்னைத் தெரியாது தட்டிக்கழித்தாய்
எனது அருமை புரிந்த போது

நான் உன் அருகில் இல்லை
பூமித்தாயின் மடியில் தூங்குகின்றேன்
யாரையும் கஷ்டப்படுத்தாமல்

Sunday, July 25, 2010

காதல் சொல்ல மறுத்தவளே காயம் மட்டும் இலவசமோ? சோகம் என்னை வதைத்தாலும் உன்னை என்றும் மறவேனே............


நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............

கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!

அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................