link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, November 18, 2010

கிடைக்குமா வாழ்வில் ஓர் வரமாக..


கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள்
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்

தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால்
காலம் முழுவதும்
கல்லறை வரையிலும்

கண்மூடி காத்திருக்கின்றேன்

காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவன் நீ
இருப்பினும் கல்லறை வரை
காத்திருப்பு தேவையா?

உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது நான் வரையும்
இந்த கவிதை தான்

உன் குரல் கேட்க
இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது.
இசை பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா?

என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள்
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில்
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
சொல்லி அழுவதற்கு
ஏற்கும் மனம் வேண்டும்
கிடைக்குமா வாழ்வில்
ஓர் வரமாக....!

Wednesday, November 10, 2010

என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே


என்னடி பெண்ணே
எது உந்தன் காதல் அகராதி
விளங்காது விழி பிசுங்கி நிற்கும்
விடலை ஆண்யாதியில் நானும் ஒருவன்...

கழிவு என்று தூக்கிப்போட்ட
காகிதத்தை கூட சேகரித்தாய் பொக்கிஷம் என்று
காதல் ஜனனித்த முதல் மதங்களில் .....இன்று
கழிவு நீ என்று என்னையே தூக்கிப்போட்டாயே!!!
என்னடி நியாயம் இது ? !!
எங்கு நான் போய் சொல்ல ?

காதல் கண்களில் ஜனனிகிறது,
கண்ணீரால் அவ்வலியை இறக்கி வைக்க முயன்றாலும் ,
இதயத்தை குடைகிறது.....
இனிமையை கலைக்கிறது...

இக்கரை இருந்தவரை என்னிடம்
சக்கரை போல் இனிய காதல் கதை சொன்னவள்
அக்கரை சென்றதும் அடியேனை மறந்தாளே
எக்கரை போய் இதை நான் சொல்ல

கவிஞன்கள் பல முன்மொழிந்தனர் _தம்
கவிக்கு முகவரி தந்தது கன்னி என்று _இன்று
இக்கவியில் நான் முன்மொழிகிறேன்
என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே...
என் காதல் தேவதையே....

Thursday, September 23, 2010


kanavil vanthaval kadasi varaikkum varuval enru neenaiththen athan
kallaraikku kuda varamal poonai




Thursday, August 5, 2010

நீ இல்லாமல் நான் இல்லை என்பதை நான் இல்லாமல் போகும் போது நீ அறிவாய்


உன்னை மறக்க நினைக்கும் - போதெல்லாம்
உன்னை நினைக்க மறக்கவில்லை
என்பது உண்மை.......
அதை உணர மறுக்கிறது
உந்தன் பெண்மை.

நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............

கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!

அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................


காதல் சொல்ல மறுத்தவளே
காயம் மட்டும் இலவசமோ?
சோகம் என்னை வதைத்தாலும்
உன்னை என்றும் மறவேனே.............


Tuesday, August 3, 2010

உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட: அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்படி இன்னொரு இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

http://www.facebook.com/pages/Colombo-Sri-Lanka/nadpum-kathalum-natpum-katalum/72765831405?v=app_2347471856#!/?ref=home

அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்படி இன்னொரு இதயத்தையும் காதலிக்க முடிந்தது?






மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...












காதலுக்கு மட்டும் நினைவுகள் இல்லையென்றால்
இன்று நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்
அவளுடைய காதல் நினைவுகள் இல்லாமல்,
என்னைவிட்டு சென்றாலும் அவளுடைய
காதல் நினைவுகள் போதும் நான் உயிர் வாழ.
:::::::::$கவிதைகளுக்கு திகதியிட்டு இறந்த காலமாக்கி விடாதே$:::::::::
பலபேர் மனதில் மகிழ்வை தந்தாலும்- நீ
வரும் வரை என்னுல் பெய்யும் அந்த மழை
நான் ஒரு முட்டாள் என்று சொல்லி எலுப்பிய சத்த்ம்
இன்று தான் விலங்கியது இந்த கோழைக்கு

Saturday, July 31, 2010

உன் நினைவுகள் சாகக்கூடாது





மரணத்தை தேடிச்சென்ற
எந்தன் வாழ்கை மறுபடியும்
வாழநினைத்தது இந்த மண்ணில்
என் உயிர் வாழ்வதற்காக அல்ல......
உன் நினைவுகள் சாகக்கூடாது

Thursday, July 29, 2010

யாரையும் கஷ்டப்படுத்தாமல் தூங்குகின்றேன்

உன் அருகில் இருக்கும் போது
என்னைத் தெரியாது தட்டிக்கழித்தாய்
எனது அருமை புரிந்த போது

நான் உன் அருகில் இல்லை
பூமித்தாயின் மடியில் தூங்குகின்றேன்
யாரையும் கஷ்டப்படுத்தாமல்

Sunday, July 25, 2010

காதல் சொல்ல மறுத்தவளே காயம் மட்டும் இலவசமோ? சோகம் என்னை வதைத்தாலும் உன்னை என்றும் மறவேனே............


நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............

கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!

அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................