link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, August 5, 2010

நீ இல்லாமல் நான் இல்லை என்பதை நான் இல்லாமல் போகும் போது நீ அறிவாய்


உன்னை மறக்க நினைக்கும் - போதெல்லாம்
உன்னை நினைக்க மறக்கவில்லை
என்பது உண்மை.......
அதை உணர மறுக்கிறது
உந்தன் பெண்மை.

நீயே கதியே என்று இருந்தேன்
தீயே பரிசென வார்த்தைகளாய் தந்தாய்
காயே பழமென மாறும் - பெண்
நீயும் என்னவள் ஆவாய்...............

கடலலை ஓய்ந்து விட்டால் - உலகம்
அழிந்து விட்டதாய் எண்ணலாம்.......
உனக்கு தும்முவது நின்றுவிட்டால் - நான்
இறந்து விட்டதாக எண்ணிவிடாதே.....
முடிவே செய்து விடு..................!

அவள் என்னை விரும்பவில்லை
என நான் எழுதும் கவிதைகளை பலர்
விரும்புகின்றனர்...................................


காதல் சொல்ல மறுத்தவளே
காயம் மட்டும் இலவசமோ?
சோகம் என்னை வதைத்தாலும்
உன்னை என்றும் மறவேனே.............


No comments: