link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Tuesday, January 25, 2011

என் தனிமைக்குல்............. வசந்தமாய்.........நீ


தூக்கத்தில் உன் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன்- நீ இல்லை பின்பு தான் தெரிந்தது அது என் இதயத்தில் துடிக்கும் உன் நினைவுகள்..

மணவாழ்கை


மணவாழ்கை என்பது இரு மனங்கள் சேரத்தான். அதில் மாலை சூடுவோம் இரு மலர்களசேரத்தான் .கவிதை எழுதுகுறேன் என் காதலி உனக்குதான் .அதை நீ காணாமல் போவதில் வலியும் எனக்குதான்.
உன்னோடு நான் சேரவேண்டும் என்பது என் உள்ளத்தின் விருப்புத்தான். ஆனால் பணம் உள்ளவனோடு சேரவேண்டும் என்பது உன் மண ஏக்கந்தான் .
நான் வாழ துடித்தது உன் காதல ஒன்றில் தான். ஆனால் என் வாழ்வே சொந்தமானது இந்த
கல்லறை மண்ணுகுதான்

துடிக்கின்றன காரணம் ஏனடா

உணர்வுகள் துடிக்கின்றன காரணம் ஏனடா? என் உள்ளதை உன்னிடம் கொடுத்ததாலா ?இல்லை என் உயிரே நீ என்று நினைத்ததாலா?பார்வைகளால் என்னை கொன்றவனே நாம் நடந்த பாதைகளை கேட்டுப்பாறேனடா
வார்த்தைகளால் என்னை கொன்ற வாலிபனே நாம் பேசிய வார்த்தைகளை கேட்டுப்பாரேனட
விடைஇனை கூரடா கண்ணா :காரணம் நான் ஓர் பெண்ணா?

Sunday, January 23, 2011

காதல்


விரல்கள் இல்லாதவனையும் கவித்தி எழுத வைப்பது காதல்

Thursday, November 18, 2010

கிடைக்குமா வாழ்வில் ஓர் வரமாக..


கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள்
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்

தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால்
காலம் முழுவதும்
கல்லறை வரையிலும்

கண்மூடி காத்திருக்கின்றேன்

காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவன் நீ
இருப்பினும் கல்லறை வரை
காத்திருப்பு தேவையா?

உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது நான் வரையும்
இந்த கவிதை தான்

உன் குரல் கேட்க
இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது.
இசை பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா?

என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள்
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில்
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
சொல்லி அழுவதற்கு
ஏற்கும் மனம் வேண்டும்
கிடைக்குமா வாழ்வில்
ஓர் வரமாக....!

Wednesday, November 10, 2010

என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே


என்னடி பெண்ணே
எது உந்தன் காதல் அகராதி
விளங்காது விழி பிசுங்கி நிற்கும்
விடலை ஆண்யாதியில் நானும் ஒருவன்...

கழிவு என்று தூக்கிப்போட்ட
காகிதத்தை கூட சேகரித்தாய் பொக்கிஷம் என்று
காதல் ஜனனித்த முதல் மதங்களில் .....இன்று
கழிவு நீ என்று என்னையே தூக்கிப்போட்டாயே!!!
என்னடி நியாயம் இது ? !!
எங்கு நான் போய் சொல்ல ?

காதல் கண்களில் ஜனனிகிறது,
கண்ணீரால் அவ்வலியை இறக்கி வைக்க முயன்றாலும் ,
இதயத்தை குடைகிறது.....
இனிமையை கலைக்கிறது...

இக்கரை இருந்தவரை என்னிடம்
சக்கரை போல் இனிய காதல் கதை சொன்னவள்
அக்கரை சென்றதும் அடியேனை மறந்தாளே
எக்கரை போய் இதை நான் சொல்ல

கவிஞன்கள் பல முன்மொழிந்தனர் _தம்
கவிக்கு முகவரி தந்தது கன்னி என்று _இன்று
இக்கவியில் நான் முன்மொழிகிறேன்
என் கல்லறைக்கு வழிமொழிந்தது கன்னியே...
என் காதல் தேவதையே....

Thursday, September 23, 2010


kanavil vanthaval kadasi varaikkum varuval enru neenaiththen athan
kallaraikku kuda varamal poonai